Sunday, 4 May 2014

மும்பை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது : 15 பயணிகள் பலி

மும்பை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது : 15 பயணிகள் பலி

மும்பை: மும்பை அருகே திவா-செவந்த்வாடி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன.  இதில் 15 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தடம் புரண்ட பெட்டிகளுக்குள் சிக்கியிருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தால் கொங்கன் ரயில்வே தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரகோத்தானே& ரோகா ரயில் நிலையங்களுக்கிடையே இந்த விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

நன்றி : தினகரன்

0 comments:

Post a Comment