மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை, மே. 4–
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் 24 மணி நேரமும் பயணிகளின் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக நேற்று நள்ளிரவில் பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஒரு மர்ம ஆசாமி 108–க்கு போன் செய்து ‘இன்னும் சற்று நேரத்தில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் குண்டு வெடிக்கும்’ என கூறிவிட்டு சுவிட் ஆப் செய்து விட்டான்.
இதைத் தொடர்ந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அண்ணாநகர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாயும் அழைத்து செல்லப்பட்டது.
பஸ் நிலையத்தில் 12.45 மணியில் இருந்து ஒவ்வொரு பகுதியாக மெட்டல் டிடெக்டர் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். திடீர் என பஸ் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சென்று சோதனையில் ஈடுபட்டதை அறிந்த பயணிகள் பீதியடைந்தனர். பலர் பஸ் நிலையத்திற்கு வெளியே அவசர அவசரமாக சென்றார்கள். வெளியூர் செல்லும் பயணிகள் பரபரப்புடன் காணப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. சோதனைக்கு பிறகு ஒன்றும் இல்லை என தெரிந்த பிறகே பயணிகளும் அங்கு கடை வைத்து இருப்பவர்களும் நிம்மதியடைந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு 108–க்கு இதே போல் ஒரு மர்ம ஆசாமி போனில் பேசி மீனாட்சி அம்மன் கோவிலில் குண்டு வெடிக்கும் எனகூறிவிட்டு போனை கட் செய்து விட்டான். பின்னர் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தபோது சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது மதுரை மக்களை பீதியடைய வைத்துள்ளது.
பொதுமக்களை பீதியடைய செய்யும் இது போன்ற மிரட்டல்கள் விடும் ஆசாமிகளை போலீசார் கண்காணித்து கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சமூக ஆர்வலர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.
நன்றி - மாலை மலர்
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் 24 மணி நேரமும் பயணிகளின் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக நேற்று நள்ளிரவில் பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஒரு மர்ம ஆசாமி 108–க்கு போன் செய்து ‘இன்னும் சற்று நேரத்தில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் குண்டு வெடிக்கும்’ என கூறிவிட்டு சுவிட் ஆப் செய்து விட்டான்.
இதைத் தொடர்ந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அண்ணாநகர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாயும் அழைத்து செல்லப்பட்டது.
பஸ் நிலையத்தில் 12.45 மணியில் இருந்து ஒவ்வொரு பகுதியாக மெட்டல் டிடெக்டர் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். திடீர் என பஸ் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சென்று சோதனையில் ஈடுபட்டதை அறிந்த பயணிகள் பீதியடைந்தனர். பலர் பஸ் நிலையத்திற்கு வெளியே அவசர அவசரமாக சென்றார்கள். வெளியூர் செல்லும் பயணிகள் பரபரப்புடன் காணப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. சோதனைக்கு பிறகு ஒன்றும் இல்லை என தெரிந்த பிறகே பயணிகளும் அங்கு கடை வைத்து இருப்பவர்களும் நிம்மதியடைந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு 108–க்கு இதே போல் ஒரு மர்ம ஆசாமி போனில் பேசி மீனாட்சி அம்மன் கோவிலில் குண்டு வெடிக்கும் எனகூறிவிட்டு போனை கட் செய்து விட்டான். பின்னர் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தபோது சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது மதுரை மக்களை பீதியடைய வைத்துள்ளது.
பொதுமக்களை பீதியடைய செய்யும் இது போன்ற மிரட்டல்கள் விடும் ஆசாமிகளை போலீசார் கண்காணித்து கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சமூக ஆர்வலர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.
நன்றி - மாலை மலர்
0 comments:
Post a Comment