'ஜல்லிக்கட்டு போட்டிகள் சுப்ரீம் கோர்ட்டில் ஆய்வு மனு'
சென்னை:'ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு, மறு ஆய்வு மனு மூலம் அனுமதி பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தமிழர்களின் நீண்ட நெடிய, பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாக, வீர விளையாட்டுகள் போற்றப்பட்டு வருகின்றன.வீரமும், காதலும், தமிழர் பண்பாட்டின் இரு கண்கள். உலகெங்கிலும் இருந்து, தமிழகத்தை நோக்கி, பிறநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்திடக் கூடிய, பண்பாட்டுத் திருவிழா ஜல்லிக்கட்டு.தமிழகத்தில் உள்ள, 60 ஆயிரத்திற்கும், மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கேரளாவுக்கு அடிமாடுகளாக அனுப்பப்படும் அபாயத்தை தவிர்க்க வேண்டும். இந்த நோக்கத்தோடும், தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்கும், தமிழக அரசு உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதியை பெற வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்
சென்னை:'ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு, மறு ஆய்வு மனு மூலம் அனுமதி பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தமிழர்களின் நீண்ட நெடிய, பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாக, வீர விளையாட்டுகள் போற்றப்பட்டு வருகின்றன.வீரமும், காதலும், தமிழர் பண்பாட்டின் இரு கண்கள். உலகெங்கிலும் இருந்து, தமிழகத்தை நோக்கி, பிறநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்திடக் கூடிய, பண்பாட்டுத் திருவிழா ஜல்லிக்கட்டு.தமிழகத்தில் உள்ள, 60 ஆயிரத்திற்கும், மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கேரளாவுக்கு அடிமாடுகளாக அனுப்பப்படும் அபாயத்தை தவிர்க்க வேண்டும். இந்த நோக்கத்தோடும், தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்கும், தமிழக அரசு உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதியை பெற வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்
0 comments:
Post a Comment