சென்னை, பெங்களூரில் அமெரிக்க, இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி
சென்னை மண்ணடியில் சில நாட்களுக்கு முன் ஜாகீர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளி பிடிப்பட்டான்.இலங்கையின் கண்டியைச் சேர்ந்த இவனை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தமிழகத்துக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தார்.அவன் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் அவனது கூட்டாளிகள் சிவபாலன், முகமத சலிம் ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்கள் இருவரும் சென்னையில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விட்டது தெரியவந்தது. அவர்களது வீடுகளில் சோதனையிட்டு ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஜாகீர் உசேனிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினார்கள். அப்போது அவன் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தான்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்க பாகிஸ்தான் திட்ட மிட்டுள்ளது. இதற்கான உளவு வேலையை செய்வதற்காக ஜாகீர் உசேன் சென்னை வந்தான்.பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் வேவு பார்த்த ஜாகீர் உசேன், அந்த கட்டிடங்களையும், அவ்வழியே செல்லும் சாலை அமைப்புகளையும் போட்டோக்கள் எடுத்து அவற்றை இணைய தளம் மூலம் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளான்.
இதற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டியுள்ளனர். தாக்குதலை திட்டமிடுவதற்காக மாலத்தீவில் இருக்கும் மேலும் 2 பேரை சென்னைக்கு அனுப்ப ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு முடிவு செய்திருந்தது.அவர்களுக்கான பயண ஆவணங்களை தயாரிக்கும் பணியும், அவர்கள் ரகசியமாக மறைந்து வாழ்வதற்கான இடத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் ஜாகீர் உசேனிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் ஜாகீர் உசேன் பிடிப்பட்டதால் பாகிஸ்தான் சதி முறியடிக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியாவில் உள்ள வெளி நாட்டு தூதரகங்களை தகர்க்க ஐ.எஸ்.ஐ அமைப்பு சதி செய்ததாக கூறப்படும் குற்றச் சாட்டை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி முகம்மது தவுத் எடிஷாம் மறுத்துள்ளார்.பாகிஸ்தான் இது போன்ற செயல்களில் எப்போதும் ஈடுபடாது என்றும் அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி
சென்னை,
சென்னை மண்ணடியில் சில நாட்களுக்கு முன் ஜாகீர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளி பிடிப்பட்டான்.இலங்கையின் கண்டியைச் சேர்ந்த இவனை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தமிழகத்துக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தார்.அவன் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் அவனது கூட்டாளிகள் சிவபாலன், முகமத சலிம் ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்கள் இருவரும் சென்னையில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விட்டது தெரியவந்தது. அவர்களது வீடுகளில் சோதனையிட்டு ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஜாகீர் உசேனிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினார்கள். அப்போது அவன் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தான்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்க பாகிஸ்தான் திட்ட மிட்டுள்ளது. இதற்கான உளவு வேலையை செய்வதற்காக ஜாகீர் உசேன் சென்னை வந்தான்.பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் வேவு பார்த்த ஜாகீர் உசேன், அந்த கட்டிடங்களையும், அவ்வழியே செல்லும் சாலை அமைப்புகளையும் போட்டோக்கள் எடுத்து அவற்றை இணைய தளம் மூலம் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளான்.
இதற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டியுள்ளனர். தாக்குதலை திட்டமிடுவதற்காக மாலத்தீவில் இருக்கும் மேலும் 2 பேரை சென்னைக்கு அனுப்ப ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு முடிவு செய்திருந்தது.அவர்களுக்கான பயண ஆவணங்களை தயாரிக்கும் பணியும், அவர்கள் ரகசியமாக மறைந்து வாழ்வதற்கான இடத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் ஜாகீர் உசேனிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் ஜாகீர் உசேன் பிடிப்பட்டதால் பாகிஸ்தான் சதி முறியடிக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியாவில் உள்ள வெளி நாட்டு தூதரகங்களை தகர்க்க ஐ.எஸ்.ஐ அமைப்பு சதி செய்ததாக கூறப்படும் குற்றச் சாட்டை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி முகம்மது தவுத் எடிஷாம் மறுத்துள்ளார்.பாகிஸ்தான் இது போன்ற செயல்களில் எப்போதும் ஈடுபடாது என்றும் அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி
0 comments:
Post a Comment