Thursday, 29 January 2015

'கத்தி'யின் 100வது நாள். முருகதாஸ் நன்றி


விஜய்,சமந்தா நடிப்பில் கடந்த வருட தீபாவளி தினத்தில் வெளியான 'கத்தி' திரைப்படம் இன்று 100வது நூறாவது வெற்றி நாளை கொண்டாடி வருகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கத்தி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிடும்போது, ''கத்தி படத்தை வெற்றிப்படமாக்க உதவிய ரசிகர்களுக்கும், மற்றும் விஜய், தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் என்னுடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

'கத்தி' படத்திற்கு பின்னர் லிங்கா, ஐ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீஸான போதிலும் இன்னும் ஒருசில தியேட்டர்களில் 'கத்தி' வெற்றிகரமாக ஓடி 100வது நாளை எட்டியிருப்பது குறித்து கத்தி படக்குழுவினர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment