Friday, 30 January 2015

பேஸ்புக்கால் சீரியல் நடிகையான தர்ஷினி


பழம்பெரும் சண்டை இயக்குனர் சோமுவின் பேத்தி தர்ஷினி. இந்திரா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்.

அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அடுத்தது என்ற படத்தில் நடித்தார். சினிமா சரியாக வராததால் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது நெஞ்சத்தை கிள்ளாதே, நாதஸ்வரம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்ற தடுமாற்றத்தில் இருந்தார் தர்ஷினி, அந்த நேரத்தில் அவரது பேஸ்புக் தொடர்பில் இருந்த குஷ்புவிடம் நடிக்க சான்ஸ் கேட்டார்.

நேரில் அழைத்து பார்த்த குஷ்பு, தன்னுடைய பார்த்த ஞாபகம் இல்லையோ தொடரில் நடிக்க வைத்தார். குஷ்புதான் தர்ஷினிக்கு ரோல் மாடலாம்.

0 comments:

Post a Comment