உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்துக்குள் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உன்னாவோ காவல்நிலைய ஊழியர்களின் குடியிருப்புக்கு அருகே உள்ள பூட்டிய அறை ஒன்றில் பிளாஸ்டிக் கவர்களில் ஏராளமான மண்டை ஓடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 முதல் 25 பைகளில் 100க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் உள்ளன.
இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, பல்வேறு விதமான பதில்கள் வருகின்றன. விசாரணை தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த அறை பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது.
நன்றி - தினமணி

0 comments:
Post a Comment