Sunday, 8 February 2015

பேயாகும் ஆலமரம்


கடந்த ஆண்டு ஆலமரம் என்ற படம் வெளிவந்தது. ஆலமரத்துக்கு கீழே கொல்லப்படும் ஒரு பெண் ஆவியாகி ஆலமரத்தில் தங்கியிருந்து பழிக்குபழி வாங்கி கொல்கிற கதை. இப்போது மரப்பாச்சி என்ற ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் ஆலமரமே பேயாகி பழிவாங்குகிறது.

"ஒரு இடத்தை விட்டு நகர முடியாத ஆலமரம் எப்படி எதிரிகளை பழிவாங்குகிறது என்பதுதான் புதுமையான திரைக்கதை. ஆன்மாக்கள்தான் இந்த உலகை ஆள்கிறது.

மனிதர்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து திருந்தினால் ஆன்மாக்கள் மன்னிக்கும் இல்லையேல் அதற்கான தண்டனையை தந்தே தீரும் என்கிற கருத்தை சொல்கிறது படம்" என்கிறார் அறிமுக இயக்குனர் கே.எஸ்.முத்து மனோகர். படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே.

ஜெம்ஸ் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து இதனை உருவாக்கி வருகிறார்கள். வசந்த், சுகன்யா ஹீரோ, ஹீரோயின்களாவும் கல்லூரி மாணவர்கள் மற்ற கேரக்டரிலும் நடிக்கிறார்கள். பால கணேஷ் இசை அமைக்கிறார்.

மாணவர்களே உருவாக்கியுள்ள கிராபிக்ஸ் காட்சிகளுடன் திகில் படமாக வெளிவர இருக்கிறது மரப்பாச்சி.

0 comments:

Post a Comment