Wednesday, 4 February 2015

மம்மி வேடத்தில் நடித்த ஸ்ரேயா


'மழை' படத்தில் நடித்து மயக்கி, சிவாஜியில் அடடா... என ஆச்சரியப்பட வைத்தவர் ஸ்ரேயா. அடுத்த சிம்ரன் இவர்தான் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. தொடர்ந்து விஜய், விஷால் உட்பட பலரின் படங்களில் நடித்திருந்தாலும் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவருடைய தமிழ் மார்க்கெட்டைப் பதம் பார்த்துவிட்டது.

அதன் பின் அவரால் இங்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் முடியவில்லை, முன்னணிக்கும் வர முடியவில்லை. தெலுங்கிலும் பல புதுமுக நடிகைகளின் வரவால் அங்கும் அவருடைய மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் கண்டது. இருந்தாலும் சமீபத்தில் அவர் நடித்து வெளியான 'கோபாலா கோபாலா' படத்திலும் அதற்கு முன்னர் வெளிவந்த 'மனம்' படத்திலும் நடித்து தற்போது தெலுங்கில் பழைய இடத்தைப் பிடிக்க முயற்சித்து வருகிறார்.

ஆனாலும், அந்த இரண்டு படங்களிலும் சிறு வயது குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அப்படி நடித்தால் என்ன தப்பு எனச் சீறுகிறார் ஸ்ரேயா. “நான் புதுப் புது கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சிக்கிறேன். அதில் அம்மா கதாபாத்திரமும் ஒன்று, அதில் நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. நான் ஒரு நடிகை, எனக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

அப்படிப்பட்டக் கதாபாத்திரம் என்னை ஈர்க்கும் போது நான் கண்டிப்பாக நடிப்பேன். எனக்குப் பிடித்திருக்கிறது, நான் நடிக்கிறேன்,” என பதிலளித்திருக்கிறார். ம்..அழகுப் பெண்களை சீண்டிப் பார்ப்பதே சிலருக்கு வேலையாக இருக்கிறது.

0 comments:

Post a Comment